(பொது அறிவு தகவல் கலைக்களஞ்சியம்)
புரட்சி என்பது வாலிபத்தின் கூறு பகுத்தறிவாளர் ஆயுதம்.
பழைமை விரும்பிகள், புரட்டர்கள், எதேச்சதிகாரிகள் ஆகியோருக்கு நஞ்சு.
மக்களின் மகத்தான சக்தி. அதைப் பொசுக்கிவிட எவராலும் முடியாது.
அறிஞர் அண்ணா
மற்றவர்கள் உங்களிடத்தில்
எப்படி நடந்து கொள்ள
வேண்டும் என்று நீங்கள்
விரும்புகிறீர்களோ
அப்படி நீங்கள் மற்றவர்களிடம்
நடந்து கொள்வதற்குப்
பெயர்தான் ஒழுக்கம்
தந்தை பெரியார்
ஒரு மனிதன் வாழ்ந்தான்....
லட்சியத்துக்காக
உயிரை விட்டான்
என்பதைவிட வேறென்ன
பெருமை வேண்டும்!
நேதாஜி
நான் வணங்கும் தெய்வங்கள்
மூன்று
முதலாவது அறிவு
இரண்டாவது சுயமரியாதை
மூன்றாவது நன்னடத்தை
இவற்றைத் தவிர வேறு
தெய்வங்கள் எனக்கு இல்லை
டாக்டர் அம்பேத்கர்
உலகின் எங்கோ ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக் கண்டு
உங்கள் மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே…
சே குவரே
If you tremble with
indignation at every injustice
Then you are a comrade of mine
CHE GUEVARA
நல்லவனுக்கு
நலம் நடக்கும்
என மட்டும் நம்பாது
வல்லவனாயும்
வாழ்ந்துவிடு பாப்பா
பாரதியார்
உதவும் கரங்கள்
ஜெபிக்கும்
உதடுகளைவிடச்
சிறந்தது.
அன்னை தெரஸா.
"ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்!"
கவிஞர் வாலி
நட்பு என்பதும் நம்பிக்கை
கற்பு என்பதும் நம்பிக்கை
முயற்சி என்பதும் நம்பிக்கை
நாம் மூச்சு விடுவதும் நம்பிக்கை
கவிஞர் வைரமுத்து
"இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை. ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்." -நபிகள் நாயகம்